சென்னை எப்ஃசியை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற கொல்கத்தா ..

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி கோவாவில் இன்று நடைபெற்றது.  கொரோனா பரவியுள்ளதால் சாம்பியனை தீமானிக்கும் இறுதிப்போட்டியை காண ரசிகர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டது.

ஆட்டம் தொடங்கிய 10 நிமிடத்தில் கொல்கத்தா அணி முதல் கோலை பதிவுசெய்ய முதல் பாதியில் சென்னை அணி கோல் அடிக்க திணறியது.இதனால் முதல் பாதியில் கொல்கத்தா அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இதைத்தொடர்ந்து தொடங்கிய இரண்டாவது பாதியில் கொல்கத்தா அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்தி  3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க தொடர்ந்து 2 நிமிடங்கள் வழங்க சென்னை எப்ஃசி  கோல் அடிக்க செய்த அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிய இறுதியாக  3-1 என்ற கணக்கில் கொல்கத்தா , சென்னை எப்ஃசியை வீழ்த்தியது.

இதனால் இரு அணிகளுமே தலா 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில் 3-வது முறையாக கொல்கத்தா சாம்பியன் பட்டத்தை வென்றது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்