பாகிஸ்தானிலும் வந்து விளையாடுங்க கோலி..! அழைப்பு விடுத்த பாகிஸ்தான் ரசிகர்..!

இலங்கை , பாகிஸ்தான் அணிகள் நேற்று கடைசி டி 20 போட்டியில் விளையாடியது                இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இப்போட்டியை காண வந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் கையில் வைத்து இருந்த பதாகையில் “விராட் கோலி நீங்கள் பாகிஸ்தான் வந்து விளையாடுவதை பார்க்க வேண்டும் என எழுதப்பட்டு இருந்தது.


பின்னர் அவர் டுவிட்டரில்” நான் உங்கள் தீவிர ரசிகன். உங்கள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன். நீங்கள் பாகிஸ்தான் வந்து விளையாடுவீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.
இந்த ரசிகருக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் உங்களைப் போலவே பாகிஸ்தானும்  இந்தியா வந்து விளையாட வேண்டும் என விரும்புகிறேம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author avatar
murugan