ரோஹித் பேச்சை கேட்காமல் கோலி ரிவ்யூ கேட்டது மிகப்பெரிய முட்டாள்தனம்- சச்சின் ..!

ரோஹித் பேச்சை கேட்காமல் கோலி ரிவ்யூ கேட்டது மிகப்பெரிய முட்டாள்தனம்- சச்சின் ..!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து  தென்னாபிரிக்கா  கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து பெங்களுருவில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம்  டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இந்த போட்டியின் போது தென்னாபிரிக்கா அணி பேட்டிங் செய்யும் போது 6-வது ஓவரில் ஹென்றிக்ஸ் எல்பிடபிள்யூ ஆகினார். அதற்கு  நடுவர் அவுட் தரவில்லை அதனால் கேப்டன் கோலி ரிவ்யூ கேட்டு ரிவ்யூவை வீணாக்கினார்.

இது குறித்து சச்சின் கருத்து கூறியுள்ளார்.அதில் “கோலி போன்ற ஒரு அனுபவம் உள்ள வீரர்களிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை. அது அவுட் இல்லை என்பது மிக தெளிவாக தெரிகிறது. அதையும் மீறி கோலி ரிவ்யூ கேட்டு உள்ளார்.

ரிவ்யூகேட்பதற்கு  முன் கோலி யோசித்திருக்க வேண்டும். ரோஹித் சொன்னதை கேட்காமல் கோலி ரிவ்யூ கேட்டது மிகப்பெரிய முட்டாள்தனம்” எனகூறினார்.

author avatar
murugan
Join our channel google news Youtube