3 வித ஆட்டங்களிலும் கோலியே சிறந்த வீரர்.! நியூசிலாந்து கேப்டன் அதிரடி பேச்சு.!

  • நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், ஒருநாள், டெஸ்ட், 20 ஓவர் ஆகிய 3 விதமான கிரிக்கெட் போட்டியில் கோலிதான் தற்போது மிகச்சிறந்த வீரராக இருக்கிறார் என புகழ்த்துள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்தில் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் 5 டி20 போட்டிகளை இந்தியாவும், அடுத்த 3 ஒரு நாள் போட்டி நியூசிலாந்து வென்றுள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையே முதல் டேஸ்ட் போட்டி இன்று வெலிங்டன் இருக்கும் பேசின் ரிசர்வ் என்ற ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே போட்டிக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் வில்லியம்சன், ஒருநாள், டெஸ்ட், 20 ஓவர் ஆகிய 3 விதமான கிரிக்கெட் போட்டியில் கோலிதான் தற்போது மிகச்சிறந்த வீரராக இருக்கிறார்.

மேலும் இந்திய அணி தற்போது சிறந்த பேட்ஸ்மேன்கள், சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளதாகவும், அதனால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் புகழ்த்துள்ளார். இதுபோன்று ராஸ் டெய்லர், பும்ராவை மட்டுமே குறிவைத்து ஆடினால் எங்களது பேட்ஸ்மேன்கள் சிக்கலுக்குள்ளாவார்கள், ஏனென்றால் இந்தியாவில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீச கூடியவர்கள் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்