மைதானத்தில் சட்டை இல்லாமல் ஓடிவந்த கோலி ரசிகர்..! பின் நடந்த சுவாரசியமான சம்பவம்..!

இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட்போட்டிகளில் இன்னிங்ஸ் மற்றும் 100 ரன்னிற்கு  மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.
Indore: Indian cricket captain Virat Kohli (L) looks on as security personnel take away a pitch invader.
இந்நிலையில் பொதுவாக கிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் வீரர்களின் தீவிர ரசிர்கள் எவ்வளவு பாதுகாப்புகள் இருந்தாலும் மைதானத்திற்குள் நுழைவதை வழக்கமாக வைத்து உள்ளனர்.
இப்போட்டியில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.கேப்டன் கோலியின் தீவிர ரசிகர் ஒருவர் மைதானத்தில் சட்டை இல்லாமல் கோலியை நோக்கி ஓடிவந்து உள்ளார்.அந்த ரசிகர் விராட் கோலியின் பெயரையும் , ஜெர்சி நம்பரையும் தனது முதுகு பின்னால் வரைந்து உள்ளார்.
Image
ஓடிவந்த ரசிகரின் மேலே கைபோட்டு கொண்டு சிறிது தூரம் பேசி கொண்டு கோலி வந்தார்.பின்னர் அங்கு வந்த மைதான பாதுகாவலர்கள் அந்த ரசிகரை மைதானத்தில் இருந்து அழைத்து சென்றனர்.
 

author avatar
murugan