திருமணமான பெண்ணை மிரட்டி வன்கொடுமை செய்த வாலிபர்! கைது செய்த போலீசார்!

கொடைக்கானல் அண்ணா நகரில் பகுதியை சேர்ந்த சசி என்பவர் அதே பகுதியில் தனியார் கடையில் வேலை செய்து வரும் ரோஜா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கு இடையில் பண பரிவர்த்தனை அடிக்கடி நிகழ்ந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சசியிடம் கொடுத்த கடன் அதிகமானதால் ரோஜா அவரிடம் அடிக்கடி கேட்ட பிறகு, திண்டுக்கல் வத்தலகுண்டிற்கு வருமாறும் அங்கு வந்து பணத்தை பெருகொள்ளுமாறும் கூறியுள்ளன். இதனை நம்பி அங்கு சென்றுள்ள ரோஜாவை தனியார் விடுதிக்கு அழைத்து சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளிக்க அதன் பேரில் சசியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment