இனி அத்திவரதருக்கு ஒரு மாலை மட்டும் தான் காரணம் தெரியுமா !

அத்திவரதர் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை பக்தர்களின் தரிசனத்திற்காக கடந்த 1-ம் தேதி முதல் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டு சயன கோலத்தில் 31 நாள்கள்  காட்சியளித்தார்.

இன்று முதல் 17 நாள்கள் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் நின்ற கோலத்தில் இன்று காட்சியளித்ததால் பக்தர்களின்  கூட்டம் அதிகரித்தது. இந்நிலையில் அத்திவரதர்  சயன கோலத்தில் காட்சியளித்த போது பக்தர்கள் கொண்டுவரும் சில மாலைகளை அத்திவரதர்  மேல் வைத்தனர்.

ஆனால் இன்று  முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருவதால் அத்திவரதர் கழுத்தில் ஒரு மாலை மட்டும் அணிவித்து மற்ற மாலைகளை அத்திவரதர் பாதத்தில் வைப்பதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

author avatar
murugan