கே.எல் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி அரைசதம்..!இந்திய அணி 174 ரன் ..!

இன்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது.
Image
அதன்படி முதலில் இந்திய அணி களமிறங்கியது.அணியின் தொடக்க வீரரும் , கேப்டனுமான ரோஹித் ஆட்டம் தொடக்கத்திலே 2 ரன் எடுத்து வெளியேறினர்.பின்னர் தவானும் 19 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.
இதை தொடர்ந்து களமிறங்கிய கே.எல் ராகுல் , ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் கைகோர்த்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினார். இறுதியாக இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக கே.எல் ராகுல் 52  , ஸ்ரேயாஸ் ஐயர் 62 ரன்கள் அடித்தனர்.
Image
பங்களாதேஷ் அணியில் ஷபியுல் இஸ்லாம் , சவுமியா சர்க்கார் இருவரும் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். 175 ரன்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்க உள்ளது.

author avatar
murugan