ஆன்ட்ரு ரஸல் பேயடி: அஸ்வினின் பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கு!

  • கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இவ்வாறு கொல்கத்தா மைதானத்தில் பந்து வீச தேர்வு செய்து தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டது போலும்.

கொல்கத்தா வீரர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டனர். துவக்கம் முதலே பஞ்சாப் பந்துவீச்சாளர்களை பஞ்சு பஞ்சாக பறக்க விட்டனர் . கொல்கத்தாவின் துவக்க வீரர்கள் ஓரளவிற்கு நன்றாக ஆடினார் சுனில் நரைன் 9 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுத்தார்.

அதன் பின்னர் வந்த ராபின் உத்தப்பா 67 ரன்கள் நித்திஷ் ரானா 63 ரன்களும் குவித்தனர். பின்னர் வந்த அதிரடி வீரர் ரசல் 17 பந்துகளில் 48 ரன்கள் விளாசி பஞ்சாப் அணியை பறக்கவிட்டார். இதில் 3 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும். இவ்வாறு அதிரடியாக ஆடிய கொல்கத்தா அணி பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் இலக்கு வைத்துள்ளது.

author avatar
Srimahath

Leave a Comment