நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு காத்து இருக்கும் புதுச்சேரி-கிரண் பேடி வெடிப்பது எதற்காக ..?

தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.அதன்படி வாகன ஓட்டிகளிடம் கிடுக்கு பிடியினை போக்குவரத்து காவல் கையாண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சரமாரி கேள்வியினை எழுப்பியுள்ளார்.
இது குறித்து கட்டாய ஹெல்மெட் சட்டம் புதுச்சேரிக்கு  விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா..?என்று கேள்வி எழுப்பிய அவர்  சமூக வலைத்தளத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பயணிக்க கூடிய  புகைப்படம் மற்றும் கருத்துகளை பதிவிட்ட நிலையில்  சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் புதுச்சேரி மாநிலம் இல்லையா? (அல்லது) உயர்நீதி மன்றத்தின் கண்டனத்திற்காகவே காத்திருக்கிறோமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .

author avatar
kavitha