யார் அந்த அதிரா?! கே.ஜி.எஃபின் அந்த பிரமாண்ட வில்லன் பற்றிய முக்கிய தகவல்!

பாகுபலி போல இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எஃப். அதிகம் அலட்டிகொல்லாமல் வெளியாகி பின்னர் அதிகமான ரசிகர்களை கவர்ந்து பிரமாண்ட வெற்றியை பெற்றது.

பாகுபலி போலவே இதிலும் பாதி படமே முடிவடைந்து இருக்கும். மீதி இரண்டாம் பாகத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இரண்டாம் பாகம் 2020இல் வெளியாவதற்கான வேளைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

முதல் பாகத்தில் முதன்மை வில்லனாக காட்டப்பட்ட அதிரா, கடைசி வரை முகத்தை காட்டாமல் இருப்பான். தற்போது அந்த வில்லன் கதாபாத்திரத்தை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்றார் போல அந்த அதிரா பாத்திரத்தின் போஸ்டரை திங்களன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அன்றுதான் சஞ்சய் தத்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.