கேரள மழை !72 பேர் உயிரிழப்பு !58 பேரை காணவில்லை?

கேரளாவில் ஏற்பட்ட  கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர்

தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால்  கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.8-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் சேதமடைந்துள்ளது.குறிப்பாக வயநாடு மாவட்டம் பெரும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளது.மழையால் பல மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய 58 பேரை காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிவாரண முகாம்களில் இரண்டரை லட்சம் பேர்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணுவம், விமானப்படை, கடற்படை என  அனைத்து படைகளும் தேடும்  பணி மற்றும்  மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.இந்த நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.