கேரளா விமான விபத்து : இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்த சூர்யா.!

கேரளா விமான விபத்து : இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்த சூர்யா.!

கேரளா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகர் சூர்யா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கோழிக்கோடு விமானநிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 குழந்தைகள் உட்பட 190 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அன்பானவர்களை இழந்து துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், காயமடைந்த அனைவரும் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்வதாகவும், மீட்பு பணியில் ஈடுபட்ட மலப்புரம் மக்களுக்கு பிக் சலூட் என்றும், விமானிகளுக்கு மரியாதை செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Join our channel google news Youtube