உலக சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவிற்கு ரூ.10 லட்சம் வழங்கிய கேரள ஒலிம்பிக் சங்கம்..!

கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி  நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒக்குஹாரா உடன் பி.வி.சிந்து மோதினர் . ஆட்டம் தொடக்கத்திலே இருந்து ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற செட் கணக்கில் ஒக்குஹாரா வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.
இதன் மூலம் முதன் முதலாக  சாம்பியன் பட்டம் வென்று பி.வி.சிந்து அசத்தினார். இதை தொடர்ந்து உலக சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவிற்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில் கேரள ஒலிம்பிக் சார்பில் பி.வி.சிந்துவுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாநில அரசு தொகையான 10 லட்சம் ரூபாயை கேரள ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் வி.சுனில் குமார் பி.வி.சிந்துவுக்கு வழங்கினார்.

author avatar
murugan