பேருந்தில் 50 சதவீத பயணிகளுக்கு அனுமதி.! படகு கட்டணம் 33 சதவீதம் உயர்வு.! கேரளா அரசு அதிரடி!

பேருந்தில் 50 சதவீத பயணிகளுக்கு அனுமதி.! படகு கட்டணம் 33 சதவீதம் உயர்வு.! கேரளா அரசு அதிரடி!

கேரளாவில் பேருந்து போக்குவரத்தில் முதற்கட்டமாக மாவட்டத்திற்குள் மட்டும், பேருந்து போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் மத்திய மாநில அரசுகள் நான்காம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தின.மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தின் கொரோனா நிலவரம் பொறுத்து பேருந்து போக்குவரத்தை இயக்கி கொள்ளலாம் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. 

அதன்படி, கொரோனாவில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் பேருந்து போக்குவரத்து முதற்கட்டமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மாவட்டத்திற்குள் மட்டும், பேருந்து போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

பேருந்துகள் மாவட்ட எல்லைகளை கடக்க அனுமதி இல்லை. கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் மட்டுமே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி. பேருந்தில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

மேலும், படகு போக்குவரத்திற்கும் அனுமதியளித்துள்ள கேரள அரசு படகு கட்டணத்தை கொரோனா காலத்திற்கு மட்டும் 33 சதவீதம் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஆட்டோ, டாக்சியில் ஒரே ஒரு பயணி மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube