மேலும் 78 பேருக்கு கொரோனா.! 32 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.! இது கேரள ரிப்போர்ட்.!

மேலும் 78 பேருக்கு கொரோனா.! 32 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.! இது கேரள ரிப்போர்ட்.!

இன்று கேரளாவில் மேலும் 78 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,322ஆக உயர்ந்துள்ளது. 

கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாநில அரசு நன்கு செயல்பட்டு வந்தது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தது. இதனால், அம்மாநிலத்தில் பல்வேறு தளர்வுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

தற்போது சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கேரளாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று கேரளாவில் மேலும் 78 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,322ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், 32 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 999 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது வரையில் 1303 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.  இன்று ஒருவர் பலியானதால் பலி எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube