தீவிர கண்காணிப்பில் கேரள எல்லை-அமைச்சர் விஜயபாஸ்கர்

தீவிர கண்காணிப்பில் கேரள எல்லை-அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.சீனா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.இதனால் உலகின் பிற நாடுகளும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் 44 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் யாருக்கும் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

Join our channel google news Youtube