காஷ்மீர் தலைவர்களின் குடும்பத்தினரை வீட்டு சிறையில் வைத்திருப்பது கண்டனத்திற்குரியது  -கனிமொழி

காஷ்மீர் தலைவர்களின் குடும்பத்தினரை வீட்டு சிறையில் வைத்திருப்பது கண்டனத்திற்குரியது  என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அரசு இனியாவது முயற்சி செய்ய வேண்டும்.இந்த விவகாரத்தில் ஸ்டாலின் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் காஷ்மீர் தலைவர்களின் குடும்பத்தினரை வீட்டு சிறையில் வைத்திருப்பது கண்டனத்திற்குரியது.காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்தார்.