மிகப்பெரிய கேடி சிதம்பரம்- அமைச்சர் சி.வி.சண்முகம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர்  சிதம்பரத்தை  மிகப்பெரிய கேடி என்று  சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர்  சிதம்பரம்  கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ளார்.இந்த நிலையில்  சென்னையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சிதம்பரம் இத்தனை ஆண்டு காலமாக யாருக்கு நிதியமைச்சராக இருந்தார்.அவரது குடும்பத்திற்கு தான் நிதியமைச்சராக இருந்துள்ளார்.உலகம் முழுவதும் சொத்து சேர்த்து வைத்திருக்கிற மிகப்பெரிய கேடி சிதம்பரம் என்றும் தெரிவித்துள்ளார்.