எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க!ஹீரோ முன் வாய்ப்பு கேட்ட நடிகை…

மன்னர் வகையறா படத்தின்  ஆடியோ வெளியீட்டில் பேசிய இயக்குனர் பூபதி பாண்டியன், தனக்கும், விமலுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதுபற்றி கூறினார். இதுபற்றி பூபதி பாண்டியன் கூறியது: என் டைரக்‌ஷனில் நடித்த தனுஷ், விஷால் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாகி விட்டார்கள். விமலும் தயாரிப்பாளராகியிருக்கிறார். இப்பட ஷூட்டிங்கின்போது நிறைய நடிகர்களுக்கு சரியாக வேட்டி கட்டவே தெரியவில்லை. அந்த அளவுக்கு நம் பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக்கொண்டிருக்கிறோம். ஒரு பாடல் காட்சியின்போது எனக்கும் விமலுக்கும் சிறிய கருத்துவேறுபாடு ஏற்பட்டு 2 நாட்கள் பேசாமல் இருந்தோம்.
பின்னர்தான் பேசாமல் இருந்ததைவிட பேசியே இருக்கலாம் என சொல்லும் வகையில் தனித்தனியாக எங்கள் உதவியாளர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தோம். இந்த படத்தில் பிரபு, பொன்வண்ணன், ரோபோ சங்கர், தமிழரசன், சிங்கம் புலி, யோகி பாபு ஜெயபிரகாஷ், சரண்யா, சாந்தினி, நீலிமா ராணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கின்றனர்’என்றார். ஹீரோயின் ஆனந்தி பேசும்போது,’இப்படத்தில் காமெடி நிறைய ட்ரை செய்திருக்கிறேன். இயக்குனரின் காமெடி டைமிங் பார்த்து அசந்துபோன நான் உங்களிடம் கொஞ்ச நாட்கள் உதவி இயக்குனராக வேலை பார்க்கிறேன் என வாய்ப்பு கேட்டேன்’ என்றார்.
source: dinasuvadu.com

Leave a Comment