ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டீன் ஜோன்ஸ், மாரடைப்பால் மும்பையில் காலமானார்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானாக இருந்தவர், டீன் ஜோன்ஸ். 59 வயதாகும் அவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார். மேலும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பைக்கு வந்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், செல்லும் வழியிலே அவர் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தி, ஆஸ்திரேலியாவில் உள்ள அவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.