தமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்

தமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்

தமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பன்னீர்செல்வம் பூங்கா அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இதன் பின்னர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  தமிழகத்துக்காக பல தியாகங்களை செய்தவர் கருணாநிதி.கருணாநிதியின் வாழ்க்கையே போராட்டம் தான், பள்ளியிலும் போராடியே சேர்ந்தார் .கல்லக்குடி என பெயர் மாற்றத்துக்காக போராட்டம் நடத்தியவர் கருணாநிதி.

இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்தவர் கருணாநிதி.இந்திரா காந்தி தூதர்களின் சமாதானத்தை ஏற்க மறுத்து ஆட்சியை பறி கொடுத்தவர் கருணாநிதி பேசினார்.

Join our channel google news Youtube