கார்த்தி – ஜோதிகா நடிப்பில் உருவான தம்பி படத்தின் கதை ஹிந்தி படத்தின் தழுவலா?! இயக்குனர் கூறிய ரகசியம்!

கைதி படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து கார்த்தி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் தம்பி. இந்த படத்தை பாபநாசம் படத்தை இயக்கிய மலையாள முன்னணி இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.
இபபடம் ஷூட்டிங் வேலைகள் முடிந்து டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு படக்குழு திட்டமிட்டு வருகிறது. இப்படத்தில் ஜோதிகா கார்த்திக்கு அக்காவாகவும், சத்யராஜ் அப்பாவாகவும் நடித்து உள்ளனர்.
இப்படம் பற்றி இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறுகையில், ‘ இப்படத்தின் கதையினை பாலிவுட் இயக்குனர் ரென்சீல் டி சில்வா இயக்கிய ஆவணப்படம் ஒன்றை மையமாக வைத்து தம்பி படத்தின் கதை எழுதினேன் என கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.