மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது – முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது என்று  மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங், பிரகாஷ் ஜவடேகருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் ஜல்சக்திதுறைக்கு போதுமான அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும்  மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.