கர்நாடக இசையமைப்பாளர் மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே உயிரைவிட்ட சோகம்!

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஜெர்ரி பஜஜோடி, ஒரு மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து தன் உயிரை விட்டார். இந்த சம்பவம் இசைக்கலைஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கொங்கனி இசை அமைப்பாளராகவும், பாடகராகவும் இருக்கிறார். இவர் மங்களூரு நகரில் உள்ள பேஜாய் பாகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.  அப்போது கன்னட பாடல் பாடிக் கொண்டிருக்கையில் மேடையில் சரிந்து விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அவரை தூக்கி சென்றனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள்  தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.