கர்நாடக சுயேச்சை எம்.எல்.ஏ சங்கர் தகுதி நீக்கம் – சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு!

கர்நாடக சட்டமன்றத்தில் சுயேச்சை உறுப்பினாக இருக்கும் சங்கரை தகுதி நீக்கம் செய்து அம்மாநில சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதன நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த 23ம் தேதி நடந்தது. அப்போது, சுயேச்சை எம்.எல்.ஏ ஆக இருக்கும் சங்கர் பாஜக வுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரித்துள்ளார். மேலும், அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 23 ம் தேதி நடந்த வாக்கெடுப்பில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 99 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால், 6 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக விடம் ஆட்சியை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.