கர்நாடகாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்மடைந்து வீடு திரும்பினர்.!

கர்நாடகாவில் இரண்டாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்மடைந்து வீடு திரும்பினர்.!

கர்நாடகாவில் இன்று 8,364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இன்று 8,364 பேருக்கு கொரோனா. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 5,11,346 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இரண்டாவது நாளாக இன்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். அந்த வகையில், இன்று ஒரே நாளில் 10,815 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4,04,841 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது, மருத்துவமனையில் 98,564 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 114 பேர் உயிரிழந்ததால் இதுவரை, பலியானவர்களின் எண்ணிக்கை 7,922 ஆக உயர்ந்துள்ளன கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube