ஆளுநர் அனுப்பிய கடிதம் என்னை காயப்படுத்திவிட்டது! கர்நாடக முதல்வர் குமாரசாமி வருத்தம்!

கர்நாடகா சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் ஆளும் தரப்பு பேச்சுவார்த்தை அதிகமாக நடத்தி காலதாமதம் ஆனதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

இதனால் பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்திருந்தனர். அதன் படி, ஆளுநர், சபாநாயகருக்கு, ‘ இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கெடு விதித்து இருந்தார். ‘ ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வில்லை.

இது குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுகையில், ‘ ஆளுநர் மீது நான் நல்ல மரியாதை வைத்து இருக்கிறேன். ஆனால், அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தகோரி, கெடு விதித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியது என்னை காயப்படுத்திவிட்டது. என வருத்தப்பட்டிருந்தார்.

மேலும், கர்நாடகாவில் எம்எல்ஏக்களுக்கு மத்தியில் குதிரை பேரம் நடப்பது சில நாட்களுக்குக முன்னர்தான் ஆளுநருக்கு தெரிய வந்ததா?! என ஆளுநருக்கு கேள்விகளையும் எழுப்பியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.