முதல்வர் நிவாரண நிதிக்கு 1 ஆண்டு சம்பளத்தை வழங்கிய கர்நாடக முதல்வர்

முதல்வர் நிவாரண நிதிக்கு 1 ஆண்டு சம்பளத்தை வழங்கியுள்ளார்  கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாடி வருகின்றனர். இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 1500-க்கும் மேற்பட்டோருக்கு  கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கர்நாடகத்தில்  101 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளளனர்.

இந்நிலையில் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தனது 1 வருட ஊதியத்தைசம்பளத்தை கொரோனா பாதிப்பிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார் .மேலும் குடிமக்கள்  ஏதேனும் ஒருவகையில் பங்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் எடியூரப்பா .