காவிரி டெல்டா பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….

காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் ஆறு  மாவட்டங்களுக்கு இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில், முதல் நாளிலேயே தலைநகர் சென்னையில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இன்று தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் தென் மாவட்டங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Kaliraj