கருத்து சுதந்திரம் பற்றி சோபியாவிடம் கேளுங்கள்: தமிழிசைக்கு கனிமொழி பதில்

  • நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என மாணவி சோபியாவிடம் கேளுங்கள் என தமிழிசைக்கு பதிலடி கொடுத்துள்ளார் கனிமொழி

கடந்த செப்டம்பர் மாதம் விமான நிலையத்தில் பாஜக ஒழிக என்று கோஷமிட்டதால் மாணவி சோபியா மீது அடக்குமுறையை பாரதிய ஜனதா கட்சி ஏவிவிட்டது. ஆளாளுக்கு தங்களுக்கு வாய்க்கு வந்த படி சோபியாவை தீட்டினர்.

இத்தனைக்கும் அவர் வெளிநாட்டில் இருந்து வந்த இந்திய மாணவி ஆவார். இந்நிலையில் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை, இந்தியாவிலும் இதே தான் நிலவுகிறது என கனிமொழி பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழிசை தமிழகத்திலும் இந்தியாவிலும் கருத்து சுதந்திரம் இருப்பதால் தான் அனைவராலும் பேச முடிகிறது என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த கனிமொழி மாணவி சோபியாவிடம் கேட்டால் கருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

author avatar
Srimahath

Leave a Comment