கமலஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை : பொன்ராதாகிருஷ்ணன்

கமலஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை : பொன்ராதாகிருஷ்ணன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில், தனது வேட்பாளரை ஆதரித்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, ” இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான். அவர் பெயர் நாதுராம் கோட்ஷே” எனவும், இங்கு முஸ்லீகள் அதிகமாக உள்ளதால், நான் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இவரது கருத்துக்கு, சில தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், இவரது கருத்துக்கு பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையில், மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கமலஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை என்றும், காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், கமலஹாசன் அரசியல் சாயம் பூச முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *