கமலஹாசன் நிச்சயம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் : மகேந்திரன்

உலகநாயகனாக வலம் வரும் கமலஹாசன், தற்போது அரசியலில் ஈடுபாடு காட்டி வருகின்றார். இவர் மக்கள் நீதி மய்யம் என்ற தனி கட்சியை ஆரம்பித்துள்ளார். இக்கட்சியின் துணை தலைவராக மகேந்திரன் பொறுப்பு வகிக்கிறார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மகேந்திரன், வரும் 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கமலஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.