கமலுக்கு நாளை அறுவைசிகிச்சை -ஓய்வுக்கு பிறகுதான் சந்திப்பார்

டைட்டேனியம் கம்பியை அகற்ற கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
நடிகராக இருந்த கமல்ஹாசன் தனது சினிமா வாழ்விற்கு பிறகு அரசியலில் தனது ஈடுபாட்டை கொண்டுள்ளார்.இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.மேலும் முக்கிய தேர்தலாக கருதப்படும் சட்ட மன்ற தேர்தலில் கட்சியை தயார்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார் கமல்.

இதற்கு இடையில் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் பத்திரிக்கை செய்தி ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த செய்தியில், கடந்த 2016-ஆம்  ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின்போது கமல் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது .2016ல் காலில் பொருத்திய டைட்டேனியம் கம்பியை அகற்ற கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது .சிகிச்சை முடிந்து சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு கட்சியினரை கமல் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.