பஞ்சாப் முன்னால் முதல்வரை கொடூரமாக கொன்ற நபரை விடுவிக்க சிரோன் மணி அகாலி தள் உள்துறையிடம் கோரிக்கை…

பஞ்சாப் முன்னால் முதல்வரை கொடூரமாக கொன்ற நபரை விடுவிக்க சிரோன் மணி அகாலி தள் உள்துறையிடம் கோரிக்கை…

  • பஞ்சாப் மாநில  முன்னாள் முதல்வர் பியாந்த் சிங், காலிஸ்தான் தீவிரவாதி ரஜோனாவால் கொள்ளப்பட்டார்.
  • இதனால்  இவருக்கு  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதை  ரத்து செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சிரோமணி அகாலி தளம் தலைவர்கள் இன்று உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
சீக்கியர்களுக்கு தனிநாடு வேண்டும் என்று கோரி  காலிஸ்தான் என்ற  அமைப்பு 1995-ல் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த்சிங்கை தற்கொலைப் படை தாக்குதல் மூலம் கொடூரமாக  படுகொலை செய்தது. இதற்காக  தீவிரவாதி ரஜோனாவுக்கு கடந்த 2007ம் ஆண்டு  விசாரணை நீதிமன்றம் இவருக்கு  தூக்கு தண்டனை விதித்தது. எனவே, ரஜோனாவை கடந்த  2012-ல் இவரை தூக்கிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் சீக்கியர் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று ரஜோனா தூக்கிலிடப்படவில்லை

Related image

இந்நிலையில் சீக்கிய குரு குருநானக்சிங்கின்  550வது பிறந்த நாள் ஆண்டை முன்னிட்டு ரஜோனாவின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால்இதுகுறித்து,  நாடாளுமன்றத்தில் ரஜோனாவின் தூக்கு தண்டனையை ரத்து செய்யப் போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறையில் அண்மையில் தீவிரவாதி ரஜோனா, தமது தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். பின்னர்,  குருத்வார பிரபந்த கமிட்டி நிர்வாகிகள் வேண்டுகோளை ஏற்று தீவிரவாதி ரஜோனா தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார். இந்நிலையில் இன்று பஞ்சாபை சேர்ந்த  சிரோமணி அகாலி தளம் கட்சியின்  தலைவர் சுக்பீர் சிங் பாதல் தலைமையிலான குழுவினர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது ரஜோனாவின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்..

author avatar
Kaliraj
Join our channel google news Youtube