ட்விட்டரில் ஜூலியை தகாத வார்த்தைகளில் வச்சி செஞ்ச நெட்டிசன்கள்

ட்விட்டரில் ஜூலியை தகாத வார்த்தைகளில் வச்சி செஞ்ச நெட்டிசன்கள்

தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டமான ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அதிகமான பெண்கள் ,இளைஞர்கள் பங்கேற்றனர். மேலும் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜூலி கலந்து கொண்டார்.இப்போராட்டத்தில்  ஜூலியின் பங்கு அதிகமாகவே இருந்தது.அதன் மூலம் ஜூலி தமிழக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு  ஜூலி பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இளைஞர்கள் மத்தியில் இருந்த பெயரை கெடுத்துக்கொண்டார்.

இந்நிலையில் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.ஆனால் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க போவதால் என்னவோ அதனால் பல பிரச்சனைகளை ஜூலி சந்தித்து வருகிறார்.

சமூக வலைத்தள பக்கத்தில் பலர் எப்போதும் படுமோசமாக கமெண்டுகள் செய்து வருகின்றனர்.சில மாதங்கள் முன்பு ஜூலி இவர்களுக்காக ஒரு வீடியோவே வெளியிட்டார். ஆனால் கமெண்டுகள் செய்வதை நிறுத்தவே இல்லை.

நேற்று முன் தினம் நடந்த தேர்தலில் ஜூலி வாக்களித்துவிட்டு ட்விட்டரில் அப் புகைப்படத்தை வெளியிட்டார். அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு படு மோசமாக கமெண்டு செய்து வருகின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *