ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி!

  • ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக அவரது 25வது திரைப்படமாக பூமி திரைப்படம் தயாராகி வருகிறது.
  • மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட சரித்திர படமான பொன்னியின் செல்வன் படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி தற்போது அவரது 25வது திரைப்படமாக பூமி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய லட்சுமண் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இதுபோக மணிரத்தினம் இயக்கத்தில் அவரது கனவு படமாக பிரம்மாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது வெளிநாடுகளில் வேகமாக படமாக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தாய்லாந்தில் பூமி பட ஷூட்டிங்கில் ஜெயம் ரவி 2020 ஜனவரி 3ம் தேதி முதல்  12-ஆம் தேதி முதல் மீண்டும் பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளார். என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.