ஜார்க்கண்ட் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது..!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த தேர்தலில் மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.  இந்த 13 தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களிக்க  3,906 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிவரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 13 தொகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜகவும் , ஒரு தொகுதிக்கு சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது. மேலும் காங்கிரஸ் 6 , ஜார்க்கண்ட் முன்னேற்ற முன்னணி 4 , ராஷ்ட்ரிய ஜனதா தளம் 3 ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன.
நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இன்று 38 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

author avatar
murugan