சட்டத்தில் மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை – இல.கணேசன்

  • குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக  பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
  • குடியுரிமை திருத்த சட்டத்தில் மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார். 

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.தமிழகத்திலும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில், பாதிப்பு இல்லாத மக்களுக்காக தமிழகத்தில் போராட்டம் நடத்துகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தில் மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை.மக்கள் நலன் தீர்மானத்தை விளக்கி கொள்ள மாட்டோம்.

இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், விரைவில் அதற்கான தீர்வுகள் கிடைக்கும். எதிர்கட்சியினர் போராட்டம் நீர்த்து போகும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.