மருத்துவமனைக்கு செல்லும் முன்பே ஜெயலலிதாவுக்கு 2 நாட்கள் காய்ச்சல்?விசாரணை ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம்..

ஜெயலலிதாவின் மருத்துவர் சிவக்குமார் 2-வது முறையாக ஆஜராகி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் முன்பே ஜெயலலிதாவுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருந்ததாக விளக்கம் அளித்தார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினரும், மருத்துவருமான சிவக்குமார் இன்று 2-வது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே ஜெயலலிதாவுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருந்ததாகவும், வீட்டில் திடீரென ஜெயலலிதா மயக்கம் அடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் தெரிவித்தார்.

ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது தாமும் உடனிருந்ததாக தெரிவித்த சிவக்குமார், சரும பிரச்னையால் ஜெயலலிதா 2 வாரத்துக்கு ஸ்டிராய்டு எடுத்துக் கொண்டதாக கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment