இந்திய பீல்டிங் பயிற்சிளாராக ! – ஜான்டி ரோட்ஸ்

இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர், பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர் பதவிகளுக்கும் தேர்வு நடைபெறுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விணணப்பிக்கலாம் என்ற தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதற்கு வருகின்ற 30ம் தேதி இறுதி நாள் என்றும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்திய பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவித்து தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளார். உலகின் மிகச்சிறந்த பீல்டர்களில் ஒருவராக விளங்கும்  ஜான்டி ரோட்ஸ் இந்த பதவிக்கு தேர்வு பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

author avatar
Vidhusan