நான் யாருக்கு எதிராகவும் செயல்படமாட்டேன்-ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி- ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.அதன்படி வருகின்ற 30 ஆம் தேதி முதலமைச்சராக பதிவு ஏற்க உள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி.

நேற்று ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடியை சந்தித்தார்.

இதன் பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், வருங்காலங்களில் ஆந்திர அரசு ஒரு புரட்சிகரமான அரசாக இருக்கும் என்பது உறுதி .நான் யாருக்கு எதிராகவும் செயல்படமாட்டேன். மக்களின் பாதுகாவலனாக இருப்பதே என் கடமை .ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெறுவது பற்றி பிரதமர் மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன்.அடுத்த ஓராண்டில் நாட்டின் முன் மாதிரி மாநிலமாக ஆந்திராவை மாற்றிகாட்டுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment