வாவ் என்ன கேட்ச் ..! மைதானத்தில் இருந்த ரசிகர்களை மிரள வைத்த ஜடேஜா..!

வாவ் என்ன கேட்ச் ..! மைதானத்தில் இருந்த ரசிகர்களை மிரள வைத்த ஜடேஜா..!

இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 -வது டெஸ்ட் போட்டியில் தற்போது வருகிறது.இந்த போட்டியில் நேற்று முதலில் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் அடித்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய  நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்ட முடிவில் விக்கெட்டை இழக்காமல் 63 ரன்கள் எடுத்தனர்.இதைதொடர்ந்து இன்று விளையாடிய  நியூசிலாந்து 235 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்டை இழந்தது.177 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து இருந்தநிலையில் ஜேமிசன்- வாக்னர் இருவரும் கைகோர்த்து சிறப்பாக விளையாடினர்.இவர்களின் கூட்டணியை பிரிக்க இந்திய அணி திணறியது.

அவர்கள் இருவரின் கூட்டணியில் அரைசதம் அடித்தனர்.இந்நிலையில் ஷமி 72 ஓவரின் கடைசி பந்தை வாக்னர் லெக் திசையில் வீசினார்.அந்த பந்தை வாக்னர் தூக்கி அடித்தார்.கண்டிப்பாக பவுண்டரி சென்று விடும் என எதிர்பார்த்த நிலையில் ஜடேஜா தாவி பந்தை பிடித்து டைவ் அடித்தார்.ஜடேசாவின் இந்த அருமையான கேட்ச் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய அணி 7 ரன்கள் முன்னிலையில்  தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்நிலையில் இன்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்கள் அடித்துள்ளது.நியூசிலாந்து அணியில்   போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube