ஜெ. கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஜெ. கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், ராஜராஜ சோழன் காலத்தில் மழை நீர் சேகரிக்கும் முறை இருந்தது.ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது .மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மக்களே செயல்படுத்தத் தொடங்கிவிட்டனர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.