எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும்! ஜெ. தீபா பரபரப்பு பேட்டி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா,  தனியாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனும் கட்சியை ஆரம்பித்தார்.  இந்த இயக்கம் கடைசியாக நடைபெற்ற  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும் என அறிவித்தார். அண்மையில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை அதிமுகவில் சேருவதற்கான விண்ணப்பம் அனுப்பியிருந்த நிலையில், தற்போது செய்தியாளர் சந்திப்பில் ஜெ.தீபா கலந்து கொண்டார். அதில், ‘எனது கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட  விருப்பம் தெரிவித்ததாலும், எனது உடல்நிலை மோசமாக இருப்பதாலும், இனி அரசியல் வேளைகளில் தீவிரமாக ஈடுபட முடியாது, எனவே நான் தொடங்கிய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும்’ என அறிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.