கொரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்.!

சீனா, வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸான கொரோனா வைரஸ், அந்நாட்டை வாட்டிவதைக்தது. தற்பொழுது உலகளவில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்ததுக்கொண்டே வருவதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், இந்த வைரஸின் தாக்கத்தால் இதுவரை உலகளவில் 6,68,351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30,890 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக இத்தாலியில் 10,023 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 53 மருத்துவர்களும் அடங்குவர். மேலும், 92,472 பேர் பாதிக்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.