மீண்டும் நிலவில் தரையிறங்குவோம்! இஸ்ரோ தலைவர் நம்பிக்கை!

மீண்டும் நிலவில் தரையிறங்குவோம்! இஸ்ரோ தலைவர் நம்பிக்கை!

விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டு நிலவின் தரைப்பகுதிக்கு செலுத்தபட்டது. ஆனால், அது கடைசி நேரத்தில் நிலவின் தரைப்பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் துரதிஷ்டவசமாக தகவல் தொடர்பு துண்டிக்கபட்டது. இதனால்,  நிலவின் தென்துருவ தரை பகுதியை அடையும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இஸ்ரோ தலைவர் சிவன் அண்மையில் டெல்லி ஐஐடி கல்லூரியில், 50 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார், அப்போது இது குறித்து பேசினார். மீண்டும் நிலவில் தரையிறங்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும், நிலவில் கண்டிப்பாக தரையிறங்குவோம். எனவும்  இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை தெரிவித்தார்.
அந்த கடைசி 300 மீட்டர் தூரம் வரை எல்லாம் சரியாக தான் இருந்தது எனவும், கடைசியாக எங்களால் நிலாவில் மென்மையாக தரையிறக்க முடியவில்லை என தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube