சென்னையில் தனிப்படுத்தப்பட்ட 3000 வீடுகள்.. மீறி நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கம்!

சென்னையிலுள்ள 3000 வீடுகள் தனிமைப்படுத்தவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளிருந்து திரும்பியவர்கள் வீடுகளிலிருந்து “தனிப்படுத்தப்பட்டவர்கள்” என்று ஸ்டிக்கர் ஒட்டப்படும் எனவும், தனிப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் அவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.