இஸ்லாமியர்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

சென்னை வண்ணாரப்பேட்டையில் 32 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய ஸ்டாலின், சிஏஏ சட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் அதிமுக கூட்டணி எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த சட்டம் வந்திருக்காது என்றும் இந்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டு வர வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார். மேலும் COVID-19 வைரஸ் அச்சுறுத்தல் அதிகரிப்பதால் CAA-வுக்கு எதிரான போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு இஸ்லாமிய மக்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே உலக முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள COVID-19 வைரஸ் பாதிப்பு காரணமாக, மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து ஷாஹின்பாக் போராட்டங்களையும் ஒத்திவைக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்