கொரோனா ஊரடங்கில் சைலண்டாக திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி பிரபலம்!

கொரோனா ஊரடங்கில் சைலண்டாக திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி பிரபலம்!

கொரோனா ஊரடங்கில் சைலண்டாக திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி பிரபலம் சாய் சரண்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஏர்டெல் சூப்பர் சிங்கர் எனும் பிரபலமான நிகழ்ச்சியில் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் சாய்சரண். இவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இசையமைப்பாளர் இமான் அவர்கள் மூலமாக மனங்கொத்தி பறவை படத்தில் பின்னணி பாடகராக பாடக்கூடிய வாய்ப்பினை பெற்றார். அதன்பின் சாட்டை, வத்திக்குச்சி, ஜில்லா மருது போன்ற பல்வேறு தமிழ் படங்களில் பின்னணி பாடல்களை பாடியிருந்தார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பலரும் சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து கொள்ளக் கூடிய சூழ்நிலையில் இவரும் அவர்களில் ஒருவராக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஒரு சில விஜய் டிவி பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டவாறு நடந்துள்ள இவரது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்துள்ளது. ஏற்கனவே ஊரடங்கு நேரத்தில் தனது நிச்சயதார்த்தத்தை மிக சிம்பிளாக வைத்திருந்த இவர், தற்பொழுது நிச்சயம் செய்து கொண்ட நந்தினி விஸ்வநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இணையத்தளம் வாயிலாக தெரிந்துகொண்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கான புகைப்படங்களும் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், 

author avatar
Rebekal
Join our channel google news Youtube